Veranstaltungen
8. September 2019 – 8:30 bis 20:00
Berlin
தமிழாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி 2019
அன்பான தமிழ் பேசும் மக்களே!
தமிழீழ மக்களின் உடல் உள ரீதியான வளர்ச்சியின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதில் விளையாட்டும் ஒன்று. இவற்றின் வெளிப்பாட்டிற்காக பேர்லின் வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி வருடம் தோறும் நடாத்தப்படும் இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடாத்தப்பட உள்ளது.
அன்பு உள்ளம் கொண்ட அனைவரையும் இவ் விளையாட்டுப் போட்டியினை கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைப்பதோடு பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சகல பார்வையாளர்கள் பிள்ளைகள் யாவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கலாம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.